வருக..வருக..


Powered by IP2Location.com

Followers

நீல்கிரி குருமா



தேவையான பொருட்கள்:
========================

கொத்தமல்லி - அரை கப்
புதினா இலைகள் - அரை கப்
பச்சை மிளகாய் - நான்கு
கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
துருவிய தேங்காய் - ஒரு கப்
நருக்கிய பெரிய வெங்காயம் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சிபூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
தனியா தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - ஒன்றரை குழிகரண்டி
விரும்பிய காய்கறிகள் - இரண்டு கப் (பீன்ஸ்,கேரட்,காலிப்ளவர்,உருளை,வாழை,முள்ளங்கி)
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு - ஒன்று
ஏலக்காய் - ஒன்று
பிரிஞ்சி இலை - ஒன்று
செய்முறை:
===========

* காய்கறிகளை நீளமான (அவியலுக்கு நறுக்குவது போல்) துண்டுகளாக நறுக்கவும்.

* ஒரு கடாயில் மூன்று டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து பொரிந்ததும் நருக்கிய காய்கறிகளை சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.

* கை விடாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.

* சரியாக மூன்று நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து விடவும்.

* கொத்தமல்லி,புதினா இலைகள்,பச்சை மிளகாய் மூன்றையும் சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

* கசகசாவை வெறும் வாணலியில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

* துருவிய தேங்காயுடன் வறுத்த கசகசாவை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து பொரிய விடவும்.

* பொரிந்ததும் நருக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் உப்பு,பெருங்காயம்,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து வதக்கவும்.

* நல்லா வதங்கி பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள்,தனியா தூள் சேர்த்து ஒன்று சேருமாறு கிளறவும்.

* ஒன்று சேர்ந்ததும் புதினா மசாலா சேர்த்து எண்ணெய் கக்கும் வரை வதக்கவும்.

* வதக்கிய காய் கறிகளை சேர்க்கவும்.

* விரும்பினால் கால் டம்பளர் நீர் விட்டு கொத்தி வந்ததும் இறக்கவும்.

* சுவையான நீல்கிரி குருமா தயார்.

இதனை சாத்துடன் பிசிந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
சப்பாத்தி,நான்,பராத்தாக்களுக்கும் சுவையாக இருக்கும்.
எல்லா வைகயான கலவை சாதங்களுடனும் பரிமாறலாம்.
விருப்பப்பட்டால் இந்த குருமாவை பரிமாரும்னும் ஒரு கப் பன்னீர்
துண்டுகளை சேர்க்கலாம்.


இதை பற்றிய உங்க கருத்துக்களை சொல்லுங்க.

நவரத்ன குருமா


தேவையான பொருட்கள்:
=======================
முந்திரி - பத்து 
பாதாம் - ஐந்து 
பெரிய வெங்காயம் - ஒன்று
காய்கறிகளை அவியலுக்கு நறுக்குவது போல் பெரிதாக நறுக்க வேண்டும்.
பீன்ஸ் - கால் கப்
உருளை (அல்லது) வாழைக்காய்  - கால்கப் 
கேரட் - கால் கப்
முந்திரி,பாதாம்,பிஸ்தா,உலர் திராட்சை- எல்லாம் கலந்து கால் கப்
பிரெஷ் க்ரீம் - கால் கப் (இது கிடைக்கவில்லை என்றால் பால் உபயோகபடுத்தவும்.)
மாதுளம் விதைகள் - கால் கப்
பச்சை திராட்சை (அல்லது) அன்னாசி பழ துண்டுகள் - கால் கப்
(மேலே குறிப்பிட்டுள்ள பழங்கள் இல்லாமலும் செய்யலாம்.பழக்கலவைகளை பரிமாரும்முன் சேர்க்கவும்.இல்லாவிட்டால் கசப்பு தன்மை வந்துவிடும்)
பட்டை,கிராம்பு,ஏலம்,பிரிஞ்சி இலை - தலா ஒன்று 
எண்ணெய் - கால் கப்
தனியா தூள் - ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் - மூன்று
வெள்ளை மிளகு தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
===========

* வெங்காயத்தை பொடியாக அறிந்து கொள்ளவும்.

* மிளகாயை நீள வாக்கில் நறுக்கவும்.

* ஒரு கடாயில் மூன்று கப் நீர் விட்டு நன்கு கொதிக்க விடவும்.

* கொதிக்க ஆரமித்ததும் முந்திரி,பாதாம்  மற்றும் நருக்கிய வெங்காயம் சேர்த்து தணலை நடுமானமாக வைத்து நன்கு வேக விடவும்.

* வெங்காயம் மற்றும் முந்திரி வெந்ததும் தெள்ளத்தெளிவாக அதான் நிறம் மாறும் அதான் பின்பு எடுத்து நீரை வடித்து ஆறியதும் மின்னம்மியில் சேர்த்து கால் கப் நீர் விட்டு நன்றாக மைய அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

* காய்கறிகளை ஒன்றும் பாதியுமாக வேக  வைத்து நீரை வடித்து கொள்ளவும்.

* ஒரு கடாய்ல் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை சேர்த்து பொரிந்ததும் அரைத்த முந்திரி விழுதை சேர்த்து நன்கு கிளறவும்

* எண்ணெய் பிரியும் வரை வதக்கியதும் தனியா தூள் சேர்க்கவும்.

* ஒரு நிமிடம் வதக்கி இரண்டு கப் நீர் சேர்த்து தேவையான அளவு உப்பு,பச்சை மிளகாய் சேர்த்து கொதிக்க விடவும்

* கலவை கெட்டியானதும் வேக வைத்த காய்களை சேர்த்து மிளகு தூள் சேர்த்து ஒன்று சேர விடவும்.

* எல்லாம் ஒன்று சேர்ந்ததும் க்ரீம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அனைத்து விடவும்.

* முந்திரி,பாதாம்,உலர்திராட்ச்சை சேர்த்து கலந்து பரிமாறும் முன் பழ கலவைகள் கொஞ்சம் சேர்த்து கலக்கி பரிமாறவும்.

* சுவையான நவரத்ன குருமா தயார்.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை சொல்லவும்.




ஆலு பராத்தா



தேவையான பொருட்கள்;
=======================
உள்ளே நிரப்புவதற்கு:
--------------------------------
உருளை கிழங்கு - மூன்று
பச்சை மிளகாய் - மூன்று
மிளகாய் தூள் -  ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - ஒரு சிட்டிகை
சர்க்கரை - ஒரு சிட்டிகை
பொடியாக நருக்கிய
 கொத்தமல்லி - இரண்டு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சை பட்டாணி - கால் கப் (தேவைப்பட்டால்)

மேல் மாவிற்கு :
-----------------------

மைதா - இரண்டு கப்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்
சீரகம் - கால் டீஸ்பூன்
நீர் - மாவு பிசைவதற்கு
எண்ணெய் - பராத்தா செய்வதற்கு

செய்முறை:
============

* மாவு உருண்டையினுள் நிரப்புவதற்கு தேவையான உருளை கலவையை முதலில் தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
* உருளை கிழங்கை தோல் சீவி நன்றாக வேக வைத்து மசித்துக்கொள்ளவும்.
*  பட்டாணி தவிர மீதி அனைத்து பொருட்களையும் மசித்த உருளையுடன் சேர்த்து நன்றாக மசிக்கவும்..(வெந்த உருளை கிழங்கு மிக சூடாக இருக்கும் .கவனமாக கரண்டியால் கிளறவும்)
* பட்டாணியை ஒரு நிமிடம் உப்பு நீரில் வேக வைத்து நீரை வடித்து இந்த கலவையில் சேர்த்து கிளறவும்.
* உள்ளே நிரப்புவதற்கு கலவை தயார்.

மேல் மாவு செய்முறை:
-----------------------------------

* மைதா,உப்பு,சர்க்கரை,சீரகம் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசையவும்.

பாராத்தா செய்முறை:
***********************

# மேலே உள்ள படம் பதத்திற்கு மாவு வந்ததும் ஒரு எலுமிச்சை அளவு மாவை எடுத்து நன்றாக உருட்டி சப்பாத்தி போல் தேக்கவும்.

# ஒரு எலுமிச்சை அளவு உருளை கலவையை எடுத்து தேய்த்த மாவினுள்  வைத்து மாவினால் மூடி மறுபடியும் சப்பாத்தி போல் தேய்க்கவும்.

# தேவையானால் கீழே ஒட்டாமல் இருக்க சிறிது மைதா மாவினை தூவி தூவி தேய்க்கவும்..

* தோசைக்கல்லை சூடாக்கி தேய்த்த பராத்தாவை போட்டு ஒரு புறம் சிவந்ததும் மறுபுறம் திருப்பி போட்டு சிறிது எண்ணெய் விட்டு மறுபுறம் சிவந்ததும் அதிலும் சிறிது எண்ணெய் விட்டு சமமாக பரப்பி எடுக்கவும்.

* சிறிது காய்வது போல் இருந்தாள் கொஞ்சம் வெண்ணை யை பராத்தா எடுத்தவுடன்  மேலே தடவும்.


* செய்து முடித்தவுடன் சாப்பிட தாமதமாகுமானால்  காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொள்ளவும்.

குறிப்பு:
=======
பச்சை பட்டாணி மட்டுமே சேர்க்கலாம்.காய்ந்த பட்டாணியை வேக வைத்து சேர்த்தால் நல்லா இருக்காது.பச்சை பட்டாணியை வதக்கி உருளை கலவையில் சேர்த்து நன்கு மசித்து விடவும்.எப்படி செய்வதால் பராத்தா தேய்க்கும் பொழுது கடினமாக இருக்காது.

இதை பற்றிய உங்களின் கருத்துக்களை மறக்காமல் சொல்லுங்க..

மெது வடை



 தேவையான பொருட்கள்;
==========================

உருட்டு உளுந்து - ஒரு கப்
அரிசி மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கோஸ் - ஒரு  ஸ்பூன்
வெங்காயம் - ஒரு ஸ்பூன்
மிளகாய் - ஒரு ஸ்பூன்
இஞ்சி - கால் ஸ்பூன்
கேரட் - கால் ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:
============

* உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து நீர் தெளித்து அரைத்து கொள்ளவும்.

* உப்பு சேர்த்து கலந்து குளிர்சாதன பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.

* பின்பு மாவை எடுத்து பொடியாக அறிந்த காய்கறிகள் ,இஞ்சி,மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து அரிசி மாவை சேர்த்து கலக்கவும்.

* எண்ணையை நன்றாக சூடாக்கி வடை வடிவத்தில் மாவை உருட்டி எண்ணையில் போட்டு ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறு பக்கம் திருப்பி முறுகலாக்கி எடுக்கவும்.

* இந்த முறையில் செய்வதால் (ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில்+அரிசி மாவு) வெளிப்புறம் முறுகலாகவும் உள்புறம் மெதுவாகவும் இருக்கும்.தேவைக்கேற்ப காய்கறிகளின் அளவை குறைத்து காரத்தை ஏற்றி கொள்ளலாம்.


தோழர்,தோழிகளின் அன்பான விசாரிப்புகள் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கிறது.உங்கள் அனைவரின் அன்பிற்கும் நன்றி.திடீரென்று வெளி நாட்டிற்கு பயணம் செல்ல நேர்ந்ததால் தான் பதிவிட தாமதமானது.இனி தொடர்ந்து பதிவுகள் வரும்.



இந்த குறிப்பை http://simplysara07.blogspot.com/2010/01/cfk-creative-food-for-pickyfussy-eaters.html
க்கு அனுப்பவுள்ளேன்.











இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்




இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

-Ammu

th

href="http://www.thamizmanam.com">Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது Tamilish Tamil Top Blogs Thiratti.com Tamil Blog Aggregator
free hit counter Kerala :: தமிழ் திரட்டுகளின் சங்கமம்
:: Tamil blogs, news, ezines