Tuesday, May 25, 2010
சௌ சௌ கூட்டு
தேவையான பொருட்கள்:
========================
சௌ சௌ - இரண்டு
பாசி பருப்பு - அரை கப்
பச்சை மிளகாய் - பத்து
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் வற்றல் - இரண்டு
தக்காளி - ஒன்று
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கால் டீஸ்பூன் எண்ணையில் வறுத்து பொடிப்பதற்கு :
================================================
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிப்பதற்கு:
----------------------
தேங்காய் எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
===========
* சௌ சௌவை தோல் சீவி சின்ன சின்ன சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.
* தக்காளியை நான்கு துண்டுகளாகி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நருக்கிய சௌ சௌ,தக்காளி,கீறிய பச்சை மிளகாய்கள் ,கறிவேப்பிலை,உப்பு,மிளகாய் வற்றல் மஞ்சள் தூள் சேர்த்து எல்லாம் மூழ்கும் அளவு நீர் சேர்த்து பருப்பு வேகும் வரை கொதிக்க விடவும்.
* நீர் வற்ற வற்ற சேர்த்து கொள்ளவும்.
* பருப்பு வெந்ததும் கூட்டிற்கு தேவையான நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிப்பதை தாளித்து கூட்டில் கொட்டவும்.
* மிளகு சீரக பொடியை சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
* தேங்காய் வறுத்து சேர்ப்பதால் நல்ல மணமாக இருக்கும் இந்த கூட்டு.
| Reactions: |
Friday, May 21, 2010
பல்கர் உப்மா.
பல்கர் உப்மா என்றால் என்னவென்றே எனக்கு போன மாதம் வரை தெரியாது.எங்க வீட்டில் கொதுமைரவை தோசை செய்வது தான் பழக்கம். பிறகு கீதா அக்காவின் ப்ளாக்கில் குறிப்பு பார்த்து பல்கர் வாங்கி அவர்களின் முறையில் சிறிது மாற்றம் செய்து உப்மா செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக இருந்தது.என் தளத்தில் என் சொந்த குறிப்புகள் மட்டும் கொடுத்துக்கொண்டிருந்தேன்.இன்று முதல் Friends recipes என்ற தலைப்பின் கீழ் மற்ற சமையல் ப்ளாக்கிலிருந்து செய்து பார்த்து எனக்கு மிகவும் பிடித்த குறிப்புகளை வெளியிட உள்ளேன்.
கீதா அக்காவின் குறிப்பை பார்க்க இங்கு கிளிக்கவும்.
நான் செய்து பார்த்து வெளியிட்டது கீழே.

தேவையான பொருட்கள்:
========================
பல்கர் - ஒரு கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஐந்து
மிளகாய் வற்றல் - நான்கு
Fresh மொச்சை பயறு(not dried one) - ஒரு கப்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்
நறுக்கிய தக்காளி - ஒரு கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கப்
வெந்தய கீரை - மன்று டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுந்து - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
நிலகடலை - ஒருடேபிள்ஸ்பூன்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
செய்முறை:
============
* ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,கடலை பருப்பு,உளுந்து,நிலக்கடலை சேர்த்து வறுத்து மிளகாய் வற்றல்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* நருக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து வதக்கி வெந்தய கீரை சேர்த்து தணலை மீடியம்மில் வைத்து வதக்கவும்.
* வெங்காயத்தை நீளமாக நறுக்கவும்.
* மொச்சையை முக்கால் பங்கு வேக வைத்து நீரை வடித்து கொள்ளவும்.
* கீரை லேசாக வதங்கியதும் வெங்காயம்,தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் மொச்சை சேர்த்து வதக்கி உப்பு,சர்க்கரை சேர்த்து இரண்டு கப் நீர் சேக்கவும்.
* தண்ணீர் கொதிக்க ஆரமித்ததும் பல்கர் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறி நீர் வற்றியதும்
தணலை அணைத்து சூடாக பரிமாறவும்.* சுவையான பல்கர் உப்மா தயார்.
பி.கு:
--------
தலைப்பில் பல்கர் உப்மா என்று போட்டுள்ளேன் டெக்நிகலி " பல்கர் உப்புமா" என்று போட வேண்டும்.
சில பல நல்லவர்கள் கமென்ட்டில் "பல்கர் உப்பாது" என்று கூறுவார்கள் என்ற காரணத்தினால் நேமாலஜி படி இந்த நேம் சேன்ஜ்.
கீதா அக்காவின் குறிப்பை பார்க்க இங்கு கிளிக்கவும்.
Links to this post
Labels:
friends recipes
| Reactions: |
Tuesday, May 11, 2010
பூரி-உணவகத்தில் செய்யும் முறை

தேவையான பொருட்கள்:
========================
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்+ஒரு டீஸ்பூன்
சீரக பொடி - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - ஒரு சிட்டிகை
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு.
வெதுவெதுப்பான நீர் - மாவு பிசைவதற்கு.
செய்முறை:
============
* கோதுமை மாவையும்,மைதாவையும் ஒன்றாக கலந்து சீரக பொடி,உப்பு,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
* நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி சப்பாத்தி மாவு பதம் போல் பிசையவும்.
* பிசைந்த மாவில் எல்லா பகுதிகளிலும் எண்ணெய்(ஒரு டேபிள்ஸ்பூன்) படுமாறு தடவவும்.
* ஒரு ஈர துணி வைத்து மூடி கால் மணி நேரம் வைக்கவும்.
* எண்ணையை கடாயில் ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும்.
* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தேய்க்கவும்.(மாவு சமமாக இருக்க வேண்டும்)
* எண்ணெய் நன்றாக சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு லேசாக கரண்டியால் பூரி ஓரங்களில் அழுத்தவும்.
* இப்படி செய்வதால் உணவகத்தில் தரும் பூரியை போல puff ஆக உதவும்.
* ஒரு பக்கம் லேசாக சிவந்ததும் ஓரத்திலிருந்து மறுபக்கம் திருப்பவும்.
* இரு பக்கங்களும் சிவந்ததும் பேப்பர் டவலில் சிறிது நேரம் வைத்து பரிமாறவும்.
* சுவையான பூரி தயார்.
இந்தபூரி கடைசிவரை அதுவே அமுங்காது.
Links to this post
Labels:
டிபன் வகைகள்
| Reactions: |
Friday, May 7, 2010
மாம்பழ கார குழம்பு
தேவையான பொருட்கள்:
=========================
பழுத்த மாம்பழம் - ஒன்று
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் - அரை கப்
பச்சை மிளகாய் - பன்னிரண்டு
மிளகாய் தூள் - இரண்டு டீஸ்பூன்
தக்காளி - நான்கு
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - கால் கப்
கடுகு - கால் டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
எண்ணெய் - கால் கப்
எண்ணையில்லாமல் வறுத்து பொடிக்க:
=====================================
வெந்தயம் - கால் டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
அரிசி - ஒரு டீஸ்பூன்
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
============
* வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கவும்.
* வறுத்து பொடிக்க வேண்டியத்தை பொடித்து வைத்து கொள்ளவும்.
* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* மாம்பழத்தை தோலுடன் பெரிது பெரிதாக நறுக்கவும்.
* புளியை இரண்டரை கப் சுடு நீரில் கரைத்து கொள்ளவும்.
* தக்காளியை நீர் விடாமல் ஒன்றும் பாதியுமாக அரைத்து அதில் சிறிது உப்பு மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து கலந்து புளி நீரில் சேர்த்து கலக்கவும்.
* எண்ணையை காயவைத்து கடுகு,வெந்தயம்,கறிவேப்பிலை தாளித்து வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.
* புளி கரைசலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் மாம்பழ துண்டுகள் சேர்த்து உப்பு சரி பார்த்து தணலை நடுத்தரமாக வைக்கவும்.
* எல்லாம் ஒன்று சேர்ந்து கொதித்து எண்ணெய் கக்கியதும் பொடித்த பொடி தூவி ஒரு நிமிடம் கிளறி இறக்கவும்.
குறிப்பு:
=======
மாம்பழம் சேர்த்து செய்வதால் இனிப்பாக இருக்குமென்று நினைக்க வேண்டாம்.காரமும்,புளிப்பும் சேர்ந்து அருமையாக இருக்கும்.காண்டிப்பாக அனைவரும் செய்து பார்க்க வேண்டிய ஒரு கார குழம்பு.காரம் கூட குறைய சேர்த்து கொள்ளலாம்.
Links to this post
Labels:
குழம்பு வகைகள்
| Reactions: |
Wednesday, May 5, 2010
European Style Mashed Potatoes
தேவையான பொருட்கள்:
========================
யுகான் கோல்ட் பொடேடோஸ் - மூன்று
Soar Cream / Whipping Cream - அரை கப்
பட்டர் - ஒரு ஸ்டிக்/ஐந்து டேபிள்ஸ்பூன்
Whole Milk - கால் கப்
மிக பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெள்ளை மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
===========
* முதலில் உருளை கிழங்குகளை நன்றாக கழுவி தோல் உரித்து கொள்ளவும்.
* நடுவாந்திர சதுரங்களாக நறுக்கி நீரில் போட்டு நறுக்கிய பூண்டையும் சேர்த்து வைக்கவும்.
* ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பங்கு நீர் விட்டு 1/8 டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் உருளை கிழங்கை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
* Fork tender/கைகளால் மசித்தால் கட்டி இல்லாமல் மசியும் பதம் வந்ததும் நீரை வடிகட்டி Potato Masher உபயோகித்து கட்டி இல்லாமல் மசித்து கொள்ளவும். potato masher இல்லையென்றால் அகப்பை உப்பயோகித்து மசித்து கொள்ளவும்.
* பாலையும்,கிரீமையும் ஒன்றாக கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
* உருளை கிழங்கு மசித்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கிரீம் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறவும்.தணலை மிக குறைவாகவே probably in 2 or 3 வைக்கவும்.
* வெண்ணையையும் உருளையுடன் சேர்த்து உருக விடவும்.
* வெண்ணை எல்லாம் உருகியதும் மிளகு தூள் சேர்த்து எடுத்து சூடாக பரிமாறவும்.
* சுவையான Mashed Potatoes தயார்.
* சாப்பிடும் முன்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
குறிப்பு:
========
ஐரோப்பியா,அமேரிக்கா,இத்தாலி,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மதிய உணவில் கண்டிப்பாக Mashed Potatoes இடம்பெறும்.
வெண்ணைக்கு பதிலாக நெய் உபயோகிக்க கூடாது.
வெண்ணையை உருளையில் சேர்க்கும் முன்பு தனி அடுப்பில் வைத்து உருக்கி சேர்க்ககூடாது.அதற்க்கு பதிலாக உருளையில் சேர்ப்பதற்கு ஒரு பத்து நிமிடம் முன்னாடி உளிர்சாதன பெட்டியில் இருந்தது வெளியில் எடுத்து வைக்கலாம்.
வீட்டில் தயாரித்த வெண்ணையை விட கடையில் வாங்கும் வெண்ணையை வைத்து செய்தால் தான் ருசி சரியாக வரும்.
உப்பு மிக குறைந்த அளவே தேவைப்படும்.
உருளையை அடுப்பில் வைத்து அதிக நேரம் கிளறிக்கொண்டே இருக்க கூடாது வெண்ணை உருகி உருளையுடன் சேர்ந்த உடன் இறக்கி விட வேண்டும்.
எல்லாம் சரியாக வந்தால் இதன் சுவை அபாரமாக இருக்கும்.
இதில் உருளையை அரைக்க கூடாது மென்மையாக வர வேண்டும் என்பதற்காக.
========================
யுகான் கோல்ட் பொடேடோஸ் - மூன்று
Soar Cream / Whipping Cream - அரை கப்
பட்டர் - ஒரு ஸ்டிக்/ஐந்து டேபிள்ஸ்பூன்
Whole Milk - கால் கப்
மிக பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெள்ளை மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
===========
* முதலில் உருளை கிழங்குகளை நன்றாக கழுவி தோல் உரித்து கொள்ளவும்.
* நடுவாந்திர சதுரங்களாக நறுக்கி நீரில் போட்டு நறுக்கிய பூண்டையும் சேர்த்து வைக்கவும்.
* ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பங்கு நீர் விட்டு 1/8 டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் உருளை கிழங்கை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.
* Fork tender/கைகளால் மசித்தால் கட்டி இல்லாமல் மசியும் பதம் வந்ததும் நீரை வடிகட்டி Potato Masher உபயோகித்து கட்டி இல்லாமல் மசித்து கொள்ளவும். potato masher இல்லையென்றால் அகப்பை உப்பயோகித்து மசித்து கொள்ளவும்.
* பாலையும்,கிரீமையும் ஒன்றாக கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.
* உருளை கிழங்கு மசித்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கிரீம் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறவும்.தணலை மிக குறைவாகவே probably in 2 or 3 வைக்கவும்.
* வெண்ணையையும் உருளையுடன் சேர்த்து உருக விடவும்.
* வெண்ணை எல்லாம் உருகியதும் மிளகு தூள் சேர்த்து எடுத்து சூடாக பரிமாறவும்.
* சுவையான Mashed Potatoes தயார்.
* சாப்பிடும் முன்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
குறிப்பு:
========
ஐரோப்பியா,அமேரிக்கா,இத்தாலி,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மதிய உணவில் கண்டிப்பாக Mashed Potatoes இடம்பெறும்.
வெண்ணைக்கு பதிலாக நெய் உபயோகிக்க கூடாது.
வெண்ணையை உருளையில் சேர்க்கும் முன்பு தனி அடுப்பில் வைத்து உருக்கி சேர்க்ககூடாது.அதற்க்கு பதிலாக உருளையில் சேர்ப்பதற்கு ஒரு பத்து நிமிடம் முன்னாடி உளிர்சாதன பெட்டியில் இருந்தது வெளியில் எடுத்து வைக்கலாம்.
வீட்டில் தயாரித்த வெண்ணையை விட கடையில் வாங்கும் வெண்ணையை வைத்து செய்தால் தான் ருசி சரியாக வரும்.
உப்பு மிக குறைந்த அளவே தேவைப்படும்.
உருளையை அடுப்பில் வைத்து அதிக நேரம் கிளறிக்கொண்டே இருக்க கூடாது வெண்ணை உருகி உருளையுடன் சேர்ந்த உடன் இறக்கி விட வேண்டும்.
எல்லாம் சரியாக வந்தால் இதன் சுவை அபாரமாக இருக்கும்.
இதில் உருளையை அரைக்க கூடாது மென்மையாக வர வேண்டும் என்பதற்காக.
Links to this post
Labels:
இத்தாலியன் உணவுகள்
| Reactions: |
Subscribe to:
Posts (Atom)













